Thursday, October 17, 2024

Litigation -2,3 & 4.VAO. Meeting @ Poombarai Village ( Task - 2 )

ஒப்புதல்அட்டையுடன் பதிவு அஞ்சல் 
விடுநர் :
ஹாஜி.S.முஹம்மது,
S/O. சேக் முஹம்மது 
பங்களாபட்டி ரோடு 
வடகரை. பெரியகுளம்.
தேனி மாவட்டம். 
9345562420

பெறுநர் :
1.திரு. கிராம நிர்வாக அலுவலர் அவர்கள்
பூம்பாறை கிராமம் கொடைக்கானல். 
2. திரு. கோபாலகிருஷ்ணன்.ME.,  அவர்கள், பூம்பாறை கிராம பஞ்சாயத்து தலைவர்,  பூம்பாறை. 

ஐயா 
பொருள்:  20 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காண முடியாமல் இருக்கும் பூம்பாறை கிராம சர்வே எண் 331/5 ல் ஆரம்பித்து 335 வரை செல்லும் சாலை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக ...

பார்வை:
1.  23/08/2024 ம் தேதி நடந்த மக்களுடன் முதல்வர் முகாம் மனு என்.MMCR/9896197 க்கு  கொடைக்கானல் வட்டாட்சியர் தபால் .ந.க.எண்.2166/2024-46/ஆ1.தேதி: 27/09/2024.
2.   24/11/1999 தேதி கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவு( MC No.4/1999 ...ந.க.என்.1787/1999/A - 5 )

 பூம்பாறை கிராம முன்னால் பஞ்சாயத்து தலைவர் தங்கராஜ் சேர்வை மற்றும் நாள்வர்  பொருளில் கண்ட  சாலை ஆக்கிரமிப்பு  சம்பந்தமாக  கிராம நிர்வாக அதிகாரியாகிய தாங்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கொடைக்கானல் வட்டாட்சியர், தபால் ந.க.எண்.2166/2024-46/ஆ1.தேதி: 27/09/2024. ன். .அறிவுறுத்தலின்படி சென்ற 7/10/2024 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல்   கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்து,மாவட்ட கண்காணிப்பாளரின்  அறிவுரையின்படி 11/10/2024 தேதி மாலை 6 மணி அளவில் கொடைக்கானல் காவல் துணை  கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து எனது குறைகளை எடுத்துக் கூறினேன். 

மேற்கண்ட பிரச்சினைகளை சுமுகமான தீர்வு காணவும் குறிப்பாக பூம்பாறை கிராமம் "மாதாரி" தெருவில் இருக்கும் லேட் ஆட்டுக்கார வேலன் மகள் அழகம்மாள் மற்றும் அவருடைய கணவன் ரத்தினம் தம்பதியரை  கைப்பாவையாக  வைத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் என்னை சிக்க வைத்து எனது நடவடிக்கைகளை முடக்க எதிர்த்தரப்பினர்  விரித்திருக்கும் வளையில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காக  பூம்பாறை கிராமத்தில்  ஒரு பொது  இடத்தில் தாங்கள் இருவரின்  முன்னிலையில் பொதுமக்களை சந்தித்து ஆலோசனை கேட்க உள்ளேன்.

ஒரு குற்றம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில்  நடப்பதற்கு முன் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும். 
இதன் அடிப்படையில் தங்களுக்கு எப்போது நேரத்தை ஒதுக்க முடியும் என்ற தகவலை தாங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து,  எனக்கு தெரியப்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் அரங்கேறும் செயல்பாடுகளை எனது கைபேசியில் படம் பிடிக்கவும் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பகிரவும் அனுமதி வேண்டுகிறேன்.
இப்படிக்கு 
தங்கள் பணிவுள்ள,

எஸ் முஹம்மது(16/10/2024 )

Copy to 
1. வட்டாட்சியர் கொடைக்கானல் 
2.வட்டார வளர்ச்சி அதிகாரி கொடைக்கானல் 
3.காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள்
 கொடைக்கானல் சரகம் கொடைக்கானல்.

இனைப்பு :
கொடைக்கானல் வட்டாட்சியர் தபால் .ந.க.எண்.2166/2024-46/ஆ1.
தேதி: 27/09/2024.

பின்குறிப்பு :
நல்லெண்ணத்தின் அடிப்படையில் ,கீழே கண்ட எனது சமூக வலைத்தளங்களில்மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும்  அனைத்து நிகழ்வுகளையும்  தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

1.https://www.facebook.com/@hajishemd/?mibextid=ZbWKwL
2.https://youtube.com/@hajishemd?si=acT0zR6hc3cskekX 
3.https://chat.whatsapp.com/LZjxHCC9zh3ERpg4X7w4vL
( Litigation )
4. https://chat.whatsapp.com/E9nMonQNDC605Va3G4vNvd
( அறம்பாடுதல்) 
5.http://kodaikanalpropertyshop.blogspot.com/?m=1

Wednesday, October 9, 2024

Problem Vs.Solution.

அனைத்து பிரச்சனைகளையும் ஓரங்கட்டி விட்டு அதாவது இறைவன் தீர்ப்பில் விட்டு விட்டு அந்தரங்க தோட்டத்தில்  நுழைதல் ..இதுவே 100 நாள் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம். 

இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் ? அந்தரங்க தோட்டத்தில் நுழைவதற்கு தடைக்கற்கள் என்னென்ன? 

தடைகற்கள் :

1. எனக்கு எதிராக நானே உற்பத்தி பண்ணிய பிரச்சனைகள், முழுமையாக வெளிவர முடியாமல் பிரச்சனைகளில் மூழ்கிப் போய் வருடக் கணக்கில் திணறிக் கொண்டிருக்கிறேன்.

எனவே,  பிரச்சினைகளின்  முடிவு எப்படி இருந்தாலும் கவலை இல்லை ஓரங்கட்டி விடுவது என முடிவெடுத்து விட்டேன் .. ஆனால்,

சில பிரச்சினைகள் எதுவும் செய்யாமல் இருந்தால்  தானாக சரியாகிவிடும். .ஆனால் என்னுடைய பிரச்சினைகள் "சிக்கல் விழுந்த நூல்கண்டு" .

ஒவ்வொரு முடிச்சாக நான் மட்டுமே அவிழ்க்க முடியும் ... நான் இல்லை என்றால் எனது வாரிசுகள் அந்த சிக்கல்கலை தீர்க்கவே முடியாது.

ஹதீஸ்:

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் கேட்டார் "இறைவன் மேல் பாரம் சாட்டி  இந்த ஒட்டகத்தை இன்று இரவு மேய விட்டு விடவா ? "  என்பதாக

அதற்கு எம்பெருமானார் "இறைவன் மேல் பாரம் சாட்டுங்கள் ஆனால் காலை கட்டி பிறகு  மேய விடுங்கள் " என்பதாக.

எனது பிரச்சினைகளுக்கு  நியாயமான ஒரு தீர்ப்பை ஏக இறைவன் வழங்குவான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை , ஆனால் ஒட்டகத்தின் காலை கட்டி மேய விடுவது கடமை. இது பெருமானாரின் அறிவுரை.  

எனது பிரச்சினைகளை ஓரம் கட்டி விட்டு என்னுடைய அந்தரங்கத் தோட்டத்தில் நுழைவது என்பதிள்  எந்த மாற்றமும் இல்லை . ஆனால் அந்தப் பிரச்சினையிள் எப்போதும்  மூழ்கி இருப்பது இனிமேல் இல்லை ..வெளியேறிவிட்டேன்.

 எனக்கு எதிராக நானே உற்பத்தி செய்து கொண்ட பிரச்சனைகளை துடைத்து எரிவதற்கான ஒரே ஆயுதம் எனது  சமூக வலைத்தளங்கள் .. அதற்கான வழிமுறை தான் கீழே கண்ட இரண்டு செயல் திட்டங்கள்.

1. அறம் பாடி அளித்தல் தீமையை

2. Releasing Property litigation Campign.

Mohammed..  9/10/24.  8.AM.

Monday, October 7, 2024

Litigation - 2, 3, & 4 POOMBARAI VILLAGE, KODAIKANAL....( Task -1 )

விடுநர் :

ஹாஜி.S.முஹம்மது,

S/O. சேக் முஹம்மது 

பங்களாபட்டி ரோடு 

வடகரை. பெரியகுளம்.

தேனி மாவட்டம். 

9345562420


பெறுநர் :

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,

 கண்காணிப்பாளர் அலுவலகம் 

திண்டுக்கல் மாவட்டம்.


ஐயா 

பொருள்: வழக்கு 1 ,2 மற்றும் 3 ல் சம்பந்தப்பட்ட எதிர்தரப்பு நபர்களால் அமர்த்தப்படும் கூலிப்படையினரின் தாக்குதலில் இருந்து  பாதுகாப்பு வேண்டிய பணிந்து சமர்ப்பிக்கும் மனு. 



பார்வை:

1.  23/1/2023 ம் தேதி தமிழக முதல்வர் முகவரியின் கீழ் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்பிய மனுவின் நகள்.

2.   24/11/1999 தேதி கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவு( MC No.4/1999 ...ந.க.என்.1787/1999/A - 5 )

3.   05/04/2024.ம் தேதி   மாவட்ட ஆட்சியருக்கு நான் அனுப்பிய மனு. 

4.  13/06/2024ம்  தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருக்கும்  வழக்கின் நகல். W.P.( MD ) No.12829 of 2024.



.கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட 73 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.

வழக்கு - 1.

2015 ஆம் வருடம்  பூம்பாறை கிராமத்தில் எனக்கு சொந்தமான .ச.என். 330/12,330,11,331/1 ல் 4 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை  தேனியில் சன் சைன் எஸ்டேட் என்ற பெயரில் வீடு கட்டி விற்றுக் கொண்டிருந்த விவாகர் / கற்பகம் தம்பதியருக்கு,  ரூபாய் 69 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி ரூபாய் 14,30,000 ரொக்கம்  கொடுத்து  மீதி ரூபாய் 55 லட்சம் ரூபாய்க்கு பகரமாக தேனி வீரபாண்டி கிராமம் குரு கார்டன் லே அவுட்டில் மேற்படி விவாகர் கற்பகம் தம்பதியர் கட்டிக் கொண்டிருந்த இரண்டு  வீட்டை  என் பெயரிலும் என் மனைவி பெயரிலும் பதிந்து கொடுத்து எங்கள் பூம்பாறை நிலத்தை அவர்கள் பெயரில் கிரையம் பதிந்து வாங்கிக் கொண்டனர். 


 மேற்படி குரு கார்டனில் என் பெயரிலும் என் மனைவிபெயரிலும் கிரையம் பதிந்து  கொடுத்த வீடுகள், எனக்கு  பதிந்து கொடுப்பதற்கு ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பே,  எங்களுக்கு கிரயம் பதிந்து கொடுத்த அதே விவாகர் என்ற நபர் திருச்சியை சேர்ந்த விமல் ஜான் மற்றும் ரமேஷ் ஆகிய இரண்டு நபர்கள் பெயரில் தனது சொந்தச் செலவில்  இதே வீட்டை  கிரயம் பதிந்து கொடுத்து,  அதே நாளில் ஒவ்வொரு வீட்டின் பேரிலும் ரூபாய் 16 லட்சம்,  மதுரை அலகாபாத் வங்கி கிளையில்   கடண் வாங்கியிருந்ததை  மறைத்து எனக்கு பதிந்து கொடுத்துள்ளனர்.


மேற்படி வில்லங்கம் வெளிப்பட்டதும், நான் அவர்களுக்கு கொடுத்திருந்த பூம்பாறை நிலத்தில் ச .என். 330/10 ல் 56.5 நிலத்தை மட்டும்  பவர் பத்திரத்தை ரத்து செய்து,  கையகபடுத்தி  பராமரித்து வருகிறேன்.மீதி சுமார் 3 ஏக்கர் 30 நிலத்தை சட்டப்படி மீட்க போராடி வருகிறேன்.

 

வழக்கு எண் 2:

மேற்படி பூம்பாறை கிராமம் சர்வே எண் 980/1 ல் சுமார் 1.8 ஏக்கர் நிலம்  40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குடும்பத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.நான் வெளியூரில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கொடைக்கானல் டவுன், பாம்பார் புரத்தில் குடியிருந்து வரும்  அந்தோணி மகன் சோரன்சிங்  என்ற நபர் வருவாய்த் துறையில் உள்ள சில ஊழல் அதிகாரிகளின் துணையுடன் போலியான ஒரு பட்டாவை உற்பத்தி செய்து மேற்கண்ட நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதை அறிந்த நான் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து மேற்கண்ட பட்டாவை ரத்து செய்தேன்.இந்த நிலத்தில் எனது இயற்கை மருத்துவ பூங்காவை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன்.

வழக்கு 3 :

பூம்பாறை மன்னவனூர் செல்லும் தார் ரோட்டிலிருந்து சர்வே எண் 331/5,331/1 வழியாக எனது 330 /10 நிலத்திற்கு செல்லும்   20 அடி அகல பாதையை, கிராம பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில்  பொதுப்பாதையாக்கி பூம்பாறை கிராம பஞ்சாயத்திற்கு எழுதிக் கொடுப்பது சம்பந்தமாக  கடந்த ஆறு மாத காலமாக பொது நலன் சார்ந்த ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். 



எனது பணிவான வேண்டுகோள் :

சுருங்கக் கூறின், மேற்கண்ட  வழக்குகளில் சம்பந்தப்பட்ட  நபர்கள் ஆட் பலமும் பண பலமும் அரசியல் செல்வாக்கும் மிக்கவர்கள். என்மேல் கூலிப்படையை வைத்து தாக்குதல் நடத்தவும்,  பொய் வழக்குகளை என் மேல் பதிவு செய்து எனது நடவடிக்கைகளை முடக்குவார்கள் என அஞ்சுகிறேன். 


ஒரு குற்றம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில்  நடப்பதற்கு முன் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.இந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கண்ட விஷயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு பணிவுடன்  கொண்டு வருகிறேன்.

 

எதிர் தரப்பினரின் பெயர் மற்றும் கைபேசி எண்கள் .


வழக்கு -1 ல் சம்பந்தப்பட்ட நபர்கள்:

1.விவாகர்   8344008176.

2.திருமதி கற்பகம் 9600378176 (இருவரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர். விலாசம் இல்லை) 

3.ஆர் குமரேசன் சன் ஆப் ராஜு 64/A, Rஅலுவலக ரோடு.போடிநாயக்கனூர் தேனி மாவட்டம்..9597778431 .

4. V.ராஜா S/O. டி எஸ் வேலுச்சாமி 19/A.தென்றல் நகர் தெற்கு போடிநாயக்கனூர் தேனி மாவட்டம் 9080505394. 


வழக்கு - 2 ல் சம்பந்தப்பட்ட நபர்கள்:

1.சோரன்சிங் S/O.அந்தோணி பாம்பார்புரம் கொடைக்கானல். 9443040170.

2.பழனிச்சாமி பண்ணை மேலாளர் சோரன்சிங் .9486230245. 


வழக்கு - 3 ல் சம்பந்தப்பட்ட நபர்கள்:


1.தங்கராஜ் சேர்வைS/O.சீனி சேவை,  முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவில் தெரு பூம்பாறை. 8098337793.

2.P.துரைராஜ் S/O.பானு ஆசாரி பூம்பாறை. 7598034999.

3.G.பழனிச்சாமி நாடார் S/O.குருசாமி நாடார் பூம்பாறை 95975 11799.


இப்படிக்கு 

தங்கள் பணிவுள்ள,


எஸ் முஹம்மது


பின்குறிப்பு :

1. மேலே கண்ட மூன்று வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் இருப்பதால் விசாரணை அதிகாரி முன் சமர்ப்பிப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


2. நல்லெண்ணத்தின் அடிப்படையில் ,கீழே கண்ட எனது சமூக வலைத்தளங்களில்,மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும்  அனைத்து நிகழ்வுகளையும்  தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன். 

1.  https://www.facebook.com/@hajishemd/?mibextid=ZbWKwL

2.  https://www.instagram.com/naturecureparkpoombarai?igsh=MXhuYm56Njh5Z3U=

3. https://chat.whatsapp.com/LZjxHCC9zh3ERpg4X7w4vL

4. 

https://youtube.com/@hajishemd?si=uk_LDjDddE4D5QK3

5.

http://kodaikanalpropertyshop.blogspot.com/?m=1

Friday, October 4, 2024

LITIGATION – 1. PUTHUKOTTAI VILLAGE 8.87 Acres Periyakulam Theni Dt.

Releasing Property Litigation Campaign 2024.
LITIGATION – 1. PUTHUKOTTAI VILLAGE 8.87 Acres Periyakulam Theni Dt.

பெரியகுளம் டவுன் தென்கரையிள் வசித்து வரும் லேட். கோவிந்த தொண்டமான் அவர்கள் குமாரர் எம் ஜி ராஜா - 1, பெரியகுளம் கும்பக்கரை சாலை புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் லேட் பிரவான் அவர்கள் குமாரர் காசையா - 2   ஆகிய இருவருக்கும், 

பெரியகுளம் பங்களாப்பட்டி ரோட்டில் வசித்து வரும்  எஸ். கே .சேக் முகம்மது ராவுத்தர் மகன் எஸ் முகமது ஆகிய நான் கோரும்  வேண்டுகோள் என்னவென்றால் ,  

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா எண்டபுளி கிராமம் சர்வே எண் 1 ,2, 3 ,4 மற்றும் 5 ல் மொத்தம் 8 ஏக்கர் 87 சென்ட் நிலம் உங்களில் இரண்டாவது நபர் காசையா மற்றும் அவரின் சகோதரர்கள்  செல்வம், முருகன்,தங்கப்பாண்டி ஆகிய நான்கு நபர்களுக்கு  சொந்தமானது என்றும், மேற்கண்ட நிலத்தை 12/12/2012 ம் தேதிய கிரைய ஒப்பந்த ஆவன என் .3416/2012 படி நான் சுமார் 220 சென்ட் நிலத்தை  9 நபர்கள் பெயரில் முறைப்படி கிரையம் பதிந்து வாங்கி விட்ட நிலையில், எம். ஜி . ராஜாவாகிய தாங்களும் தாமரைக்குளம் முன்னாள் சேர்மனும் தங்களின் நண்பருமாகிய ராம தண்டபாணியும் சேர்ந்து நான் விற்க்காமல் இருந்த மீதி நிலத்தை கையகப்படுத்தி ராம தண்டபாணி தலைமையில் 66 சென்ட் நிலத்தை மட்டும் தங்களால் விற்க முடிந்தது என்றும், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ரூபாய் ஒரு லட்சம் அட்வான்ஸ் தொகையாக என்னிடமிருந்து  பெற்றுக்கொண்டு தாங்களும்  நிலத்தின் சொந்தக்காரர்களும் சேர்ந்து ஒரு பதியப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கண்ட நிலத்தை விற்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள்  என்றும்,  நிலத்தின் சொந்தக்காரர்களில் இருவர் செய்த குளறுபடியாலும், தமிழக அரசின் அங்கீகாரம் இல்லா மனை விற்பனை தடை சட்டத்தாலும் விற்பனை நின்று போனது என்றும்,  ராம தண்டபாணி கந்து வட்டி காராகிய முருகன் என்ற நபரிடம் வாங்கிய கடனுக்காக அவரின் மான மரியாதையை காப்பாற்றுவதற்காக  மேற்கண்ட நிலத்தில் 1 ஏக்கர் 15 சென்ட்  நிலத்தை மேற்படி கந்துவட்டி முருகன் பெயரில் கிரையம்  பதிந்து கொடுக்கப்பட்டது என்பதையும் நாம் அனைவரும் மேற்கண்ட செயலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம் என்பதையும்  தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கந்துவட்டி முருகன் மற்றும் ராம தண்டபாணி ஆகிய  இருவர் பெயரிலும் நான் கொடுக்கும் புகார். 
தாங்கள் கசையா குடும்பத்தாரிடம்  எழுதிக் கொண்ட விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்து முருகனுக்கு 1  ஏக்கர் 15 சென்ட் நிலம் கிரையம் பதியும் சமயம் 12 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஒரு லட்ச ரூபாய்க்கு பகரமாக, தண்டபாணி பெயரில்   இருக்கும்  நிலத்தில் 10 சென்ட்  நிலத்தை எனக்கு கிரையம் பதிந்து கொடுப்பதாக  வாக்களித்தீர்கள்.

மேற்கண்ட 10 சென்ட் நிலத்தை விற்று கடனை கட்டுவது என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடந்த 13/12/2023 அன்று தன்டபானி/ முருகனிடமிருந்து ரூ.65,000/- 15/4/2024 ம் தேதி ரூ.67,000/- ரொக்கம் பெற்று சென்ற 15/9/2024 வரை ரூ.1,15,000/ - வட்டியாக கட்டியுள்ளேன்.

மேற்கண்ட 10 சென்ட் நிலத்தையும் நான் கடன் வாங்கும் போது பொறுப்பிற்காக கொடுத்த புரோ நோட்டு மற்றும் எனது வீட்டின் அசல் அவனத்தையும் அவர்கள் கொடுக்கும் பட்சத்தில் நான் வாக்குறுதி கொடுத்தபடி ரூ.இரண்டு லட்சம் தங்கள்  சமூகம் கட்ட தயாராக இருக்கிறேன்.

எனது வேண்டுகோள்:
எந்த நீதி மன்றமும் எந்த உயர் அதிகாரியும் தீர்க்க முடியாத
மேலே கண்ட  பிரச்சனைக்கு  நீங்கள் இருவர் மட்டுமே தீர்வு கொடுக்க முடியும் என நம்புகிறேன்.காரணம்  கடந்த 12 ஆண்டுகளாக அரங்கேறிய அனைத்து நிகழ்வுகளை நீங்கள் இருவரும் நன்கு அறிந்தவர்கள்.  நல்ல முடிவை காலம் தாழ்த்தாமல் எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 
இப்படிக்கு

 எஸ் முஹம்மது 
பின்குறிப்பு : 
நல்லெண்ணத்தின் அடிப்படையில் ,கீழே கண்ட எனது சமூக வலைத்தளங்களில்,மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும்  அனைத்து நிகழ்வுகளையும்  தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன். 

1.  https://www.facebook.com/@hajishemd/?mibextid=ZbWKwL
2.  https://www.instagram.com/naturecureparkpoombarai?igsh=MXhuYm56Njh5Z3U=
3. https://chat.whatsapp.com/LZjxHCC9zh3ERpg4X7w4vL
4. https://youtube.com/@hajishemd?si=uk_LDjDddE4D5QK3