For Buying and Selling in and around Kodaikanal,Theni and Munnar. ~ Cardamom, Coffee, Tea Estates. ~ Resorts , Hotels. ~ Residential House , Plots. Contact Haji.S Mohamed. Mobile: 9345562420. Email: hajishemd @ gmail.com
Thursday, October 17, 2024
Litigation -2,3 & 4.VAO. Meeting @ Poombarai Village ( Task - 2 )
Wednesday, October 9, 2024
Problem Vs.Solution.
அனைத்து பிரச்சனைகளையும் ஓரங்கட்டி விட்டு அதாவது இறைவன் தீர்ப்பில் விட்டு விட்டு அந்தரங்க தோட்டத்தில் நுழைதல் ..இதுவே 100 நாள் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம்.
இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் ? அந்தரங்க தோட்டத்தில் நுழைவதற்கு தடைக்கற்கள் என்னென்ன?
தடைகற்கள் :
1. எனக்கு எதிராக நானே உற்பத்தி பண்ணிய பிரச்சனைகள், முழுமையாக வெளிவர முடியாமல் பிரச்சனைகளில் மூழ்கிப் போய் வருடக் கணக்கில் திணறிக் கொண்டிருக்கிறேன்.
எனவே, பிரச்சினைகளின் முடிவு எப்படி இருந்தாலும் கவலை இல்லை ஓரங்கட்டி விடுவது என முடிவெடுத்து விட்டேன் .. ஆனால்,
சில பிரச்சினைகள் எதுவும் செய்யாமல் இருந்தால் தானாக சரியாகிவிடும். .ஆனால் என்னுடைய பிரச்சினைகள் "சிக்கல் விழுந்த நூல்கண்டு" .
ஒவ்வொரு முடிச்சாக நான் மட்டுமே அவிழ்க்க முடியும் ... நான் இல்லை என்றால் எனது வாரிசுகள் அந்த சிக்கல்கலை தீர்க்கவே முடியாது.
ஹதீஸ்:
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் கேட்டார் "இறைவன் மேல் பாரம் சாட்டி இந்த ஒட்டகத்தை இன்று இரவு மேய விட்டு விடவா ? " என்பதாக
அதற்கு எம்பெருமானார் "இறைவன் மேல் பாரம் சாட்டுங்கள் ஆனால் காலை கட்டி பிறகு மேய விடுங்கள் " என்பதாக.
எனது பிரச்சினைகளுக்கு நியாயமான ஒரு தீர்ப்பை ஏக இறைவன் வழங்குவான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை , ஆனால் ஒட்டகத்தின் காலை கட்டி மேய விடுவது கடமை. இது பெருமானாரின் அறிவுரை.
எனது பிரச்சினைகளை ஓரம் கட்டி விட்டு என்னுடைய அந்தரங்கத் தோட்டத்தில் நுழைவது என்பதிள் எந்த மாற்றமும் இல்லை . ஆனால் அந்தப் பிரச்சினையிள் எப்போதும் மூழ்கி இருப்பது இனிமேல் இல்லை ..வெளியேறிவிட்டேன்.
எனக்கு எதிராக நானே உற்பத்தி செய்து கொண்ட பிரச்சனைகளை துடைத்து எரிவதற்கான ஒரே ஆயுதம் எனது சமூக வலைத்தளங்கள் .. அதற்கான வழிமுறை தான் கீழே கண்ட இரண்டு செயல் திட்டங்கள்.
1. அறம் பாடி அளித்தல் தீமையை
2. Releasing Property litigation Campign.
Mohammed.. 9/10/24. 8.AM.
Monday, October 7, 2024
Litigation - 2, 3, & 4 POOMBARAI VILLAGE, KODAIKANAL....( Task -1 )
விடுநர் :
ஹாஜி.S.முஹம்மது,
S/O. சேக் முஹம்மது
பங்களாபட்டி ரோடு
வடகரை. பெரியகுளம்.
தேனி மாவட்டம்.
9345562420
பெறுநர் :
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
கண்காணிப்பாளர் அலுவலகம்
திண்டுக்கல் மாவட்டம்.
ஐயா
பொருள்: வழக்கு 1 ,2 மற்றும் 3 ல் சம்பந்தப்பட்ட எதிர்தரப்பு நபர்களால் அமர்த்தப்படும் கூலிப்படையினரின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வேண்டிய பணிந்து சமர்ப்பிக்கும் மனு.
பார்வை:
1. 23/1/2023 ம் தேதி தமிழக முதல்வர் முகவரியின் கீழ் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்பிய மனுவின் நகள்.
2. 24/11/1999 தேதி கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவு( MC No.4/1999 ...ந.க.என்.1787/1999/A - 5 )
3. 05/04/2024.ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு நான் அனுப்பிய மனு.
4. 13/06/2024ம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருக்கும் வழக்கின் நகல். W.P.( MD ) No.12829 of 2024.
.கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட 73 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.
வழக்கு - 1.
2015 ஆம் வருடம் பூம்பாறை கிராமத்தில் எனக்கு சொந்தமான .ச.என். 330/12,330,11,331/1 ல் 4 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை தேனியில் சன் சைன் எஸ்டேட் என்ற பெயரில் வீடு கட்டி விற்றுக் கொண்டிருந்த விவாகர் / கற்பகம் தம்பதியருக்கு, ரூபாய் 69 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி ரூபாய் 14,30,000 ரொக்கம் கொடுத்து மீதி ரூபாய் 55 லட்சம் ரூபாய்க்கு பகரமாக தேனி வீரபாண்டி கிராமம் குரு கார்டன் லே அவுட்டில் மேற்படி விவாகர் கற்பகம் தம்பதியர் கட்டிக் கொண்டிருந்த இரண்டு வீட்டை என் பெயரிலும் என் மனைவி பெயரிலும் பதிந்து கொடுத்து எங்கள் பூம்பாறை நிலத்தை அவர்கள் பெயரில் கிரையம் பதிந்து வாங்கிக் கொண்டனர்.
மேற்படி குரு கார்டனில் என் பெயரிலும் என் மனைவிபெயரிலும் கிரையம் பதிந்து கொடுத்த வீடுகள், எனக்கு பதிந்து கொடுப்பதற்கு ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பே, எங்களுக்கு கிரயம் பதிந்து கொடுத்த அதே விவாகர் என்ற நபர் திருச்சியை சேர்ந்த விமல் ஜான் மற்றும் ரமேஷ் ஆகிய இரண்டு நபர்கள் பெயரில் தனது சொந்தச் செலவில் இதே வீட்டை கிரயம் பதிந்து கொடுத்து, அதே நாளில் ஒவ்வொரு வீட்டின் பேரிலும் ரூபாய் 16 லட்சம், மதுரை அலகாபாத் வங்கி கிளையில் கடண் வாங்கியிருந்ததை மறைத்து எனக்கு பதிந்து கொடுத்துள்ளனர்.
மேற்படி வில்லங்கம் வெளிப்பட்டதும், நான் அவர்களுக்கு கொடுத்திருந்த பூம்பாறை நிலத்தில் ச .என். 330/10 ல் 56.5 நிலத்தை மட்டும் பவர் பத்திரத்தை ரத்து செய்து, கையகபடுத்தி பராமரித்து வருகிறேன்.மீதி சுமார் 3 ஏக்கர் 30 நிலத்தை சட்டப்படி மீட்க போராடி வருகிறேன்.
வழக்கு எண் 2:
மேற்படி பூம்பாறை கிராமம் சர்வே எண் 980/1 ல் சுமார் 1.8 ஏக்கர் நிலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குடும்பத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.நான் வெளியூரில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கொடைக்கானல் டவுன், பாம்பார் புரத்தில் குடியிருந்து வரும் அந்தோணி மகன் சோரன்சிங் என்ற நபர் வருவாய்த் துறையில் உள்ள சில ஊழல் அதிகாரிகளின் துணையுடன் போலியான ஒரு பட்டாவை உற்பத்தி செய்து மேற்கண்ட நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதை அறிந்த நான் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து மேற்கண்ட பட்டாவை ரத்து செய்தேன்.இந்த நிலத்தில் எனது இயற்கை மருத்துவ பூங்காவை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன்.
வழக்கு 3 :
பூம்பாறை மன்னவனூர் செல்லும் தார் ரோட்டிலிருந்து சர்வே எண் 331/5,331/1 வழியாக எனது 330 /10 நிலத்திற்கு செல்லும் 20 அடி அகல பாதையை, கிராம பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் பொதுப்பாதையாக்கி பூம்பாறை கிராம பஞ்சாயத்திற்கு எழுதிக் கொடுப்பது சம்பந்தமாக கடந்த ஆறு மாத காலமாக பொது நலன் சார்ந்த ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன்.
எனது பணிவான வேண்டுகோள் :
சுருங்கக் கூறின், மேற்கண்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆட் பலமும் பண பலமும் அரசியல் செல்வாக்கும் மிக்கவர்கள். என்மேல் கூலிப்படையை வைத்து தாக்குதல் நடத்தவும், பொய் வழக்குகளை என் மேல் பதிவு செய்து எனது நடவடிக்கைகளை முடக்குவார்கள் என அஞ்சுகிறேன்.
ஒரு குற்றம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் நடப்பதற்கு முன் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.இந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கண்ட விஷயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு பணிவுடன் கொண்டு வருகிறேன்.
எதிர் தரப்பினரின் பெயர் மற்றும் கைபேசி எண்கள் .
வழக்கு -1 ல் சம்பந்தப்பட்ட நபர்கள்:
1.விவாகர் 8344008176.
2.திருமதி கற்பகம் 9600378176 (இருவரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர். விலாசம் இல்லை)
3.ஆர் குமரேசன் சன் ஆப் ராஜு 64/A, Rஅலுவலக ரோடு.போடிநாயக்கனூர் தேனி மாவட்டம்..9597778431 .
4. V.ராஜா S/O. டி எஸ் வேலுச்சாமி 19/A.தென்றல் நகர் தெற்கு போடிநாயக்கனூர் தேனி மாவட்டம் 9080505394.
வழக்கு - 2 ல் சம்பந்தப்பட்ட நபர்கள்:
1.சோரன்சிங் S/O.அந்தோணி பாம்பார்புரம் கொடைக்கானல். 9443040170.
2.பழனிச்சாமி பண்ணை மேலாளர் சோரன்சிங் .9486230245.
வழக்கு - 3 ல் சம்பந்தப்பட்ட நபர்கள்:
1.தங்கராஜ் சேர்வைS/O.சீனி சேவை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவில் தெரு பூம்பாறை. 8098337793.
2.P.துரைராஜ் S/O.பானு ஆசாரி பூம்பாறை. 7598034999.
3.G.பழனிச்சாமி நாடார் S/O.குருசாமி நாடார் பூம்பாறை 95975 11799.
இப்படிக்கு
தங்கள் பணிவுள்ள,
எஸ் முஹம்மது
பின்குறிப்பு :
1. மேலே கண்ட மூன்று வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் இருப்பதால் விசாரணை அதிகாரி முன் சமர்ப்பிப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
2. நல்லெண்ணத்தின் அடிப்படையில் ,கீழே கண்ட எனது சமூக வலைத்தளங்களில்,மேற்கண்ட பிரச்சனை சம்பந்தமாக அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து பகிர உள்ளேன் என்பதை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
1. https://www.facebook.com/@hajishemd/?mibextid=ZbWKwL
2. https://www.instagram.com/naturecureparkpoombarai?igsh=MXhuYm56Njh5Z3U=
3. https://chat.whatsapp.com/LZjxHCC9zh3ERpg4X7w4vL
4.
https://youtube.com/@hajishemd?si=uk_LDjDddE4D5QK3
5.
http://kodaikanalpropertyshop.blogspot.com/?m=1